வெடிக்காத நிலையில் இருந்த எறிகணை ஒன்று நேற்று சாவகச்சேரியில் மீட்கப் பட்டது
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்துக்கு அருகில் உள்ள காணியிலேயே குறித்த எறிகணை காணப்பட்டுள்ளது.
காணியில் மேய்ச்சலுக்கு மாடு கட்டச் சென்றவர் புதையுண்ட நிலையில் இருந்த எறிகணையைக் கண்டார்.
அவர் சாவகச்சேரி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அங்கு விரைந்த காவல்துறையினர் அவ்விடத்தில் பாதுகாப்பினை ஏற்படுத்திவிட்டு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர்.
அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிவான் யாழ்.காவல்துறை நிலைய சிறப்பு அதிரடிப் படையினர் மூலம் எறிகணையை அப்புறப்படுத்தி செயலிழக்கச் செய்யுமாறு உத்தரவிட்டார். அதன் படி அந்த எறிகணை மீட்கப்பட்டது.