மட்டுவிலில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் மீட்பு

breaking
  வெடிக்­காத நிலை­யில் இருந்த எறி­கணை ஒன்று நேற்று சாவ­கச்­சே­ரி­யில் மீட்­கப் பட்­டது மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் ஆல­யத்­துக்கு அரு­கில் உள்ள காணி­யி­லேயே குறித்த எறி­கணை காணப்­பட்­டுள்­ளது. காணி­யில் மேய்ச்­ச­லுக்கு மாடு கட்­டச் சென்­ற­வர் புதை­யுண்ட நிலை­யில் இருந்த எறி­க­ணை­யைக் கண்­டார். அவர் சாவ­கச்­சேரி காவல்துறை நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­தார். அங்கு விரைந்த காவல்துறையினர் அவ்­வி­டத்­தில் பாது­காப்­பினை ஏற்­ப­டுத்­தி­விட்டு சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் நேற்று அறிக்கை தாக்­கல் செய்­த­னர். அறிக்­கை­யி­னைப் பார்­வை­யிட்ட நீதி­வான் யாழ்.காவல்துறை நிலைய சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் மூலம் எறி­க­ணையை அப்­பு­றப்­ப­டுத்தி செய­லி­ழக்­கச் செய்­யு­மாறு உத்­த­ர­விட்­டார். அதன் படி அந்த எறி­கணை மீட்­கப்பட்டது.