புதுக்குடியிருப்பில் வணிகர் கழத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு!

breaking

12 நாட்களாக நீராகாரம் எதுவுமின்று உண்ணா நோன்பிருந்து வீரச்சாவை தழுவிக்கொண்ட ஈகைச்சுடர் தியாகி திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு புதுக்குடியிருப்பு சந்திப்பகுதியில் புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றுள்ளது.

வணிக நிலையங்களை மூடி அலங்கரிக்கப்பட்ட பந்தலில் திலீபனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு காலை 10.00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தியுள்ளர்கள்.

இதில் புதுக்டியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த வணிக நிலைய உரிமையாளர்கள் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

வணக்க நிகழ்வில் நினைவுரைகளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான அ.அற்புரதாசா அவர்களும் புதுக்குடியிருப்பு வணிகர் கழக தலைவர் செ.செல்வச்சந்திரன் அவர்களும் நிகழ்தியுள்ளார்கள்.