12 நாட்களாக நீராகாரம் எதுவுமின்று உண்ணா நோன்பிருந்து வீரச்சாவை தழுவிக்கொண்ட ஈகைச்சுடர் தியாகி திலீபன் அவர்களின் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது
முல்லைத்தீவில் தமது பிள்ளைகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்ட கொட்டகையில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.