கடற்கரும்புலி மேஜர் விடுதலை உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

breaking
கடற்கரும்புலி மேஜர் விடுதலை, கடற்கரும்புலி மேஜர் செழியன், கடற்கரும்புலி மேஜர் நாதவேணி வீரவணக்க நாள் இன்றாகும்.! திருமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி 26.09.1999 அன்று பயணித்த சிறிலங்கா கடற்படையின் கப்பல் தொடரணியை முல்லைக் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை / ரவி, கடற்கரும்புலி மேஜர் செழியன் / உசேன், கடற்கரும்புலி மேஜர் நாதவேணி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாய்மண்ணின் விடியலின் தாகம்கொண்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்… [gallery columns="1" size="full" ids="29012,29013,29014"] தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”