அரசியல் கைதிகளின் விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகள்

breaking
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாட்டில் சிங்கள இனவாதத்தை தூண்ட அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் எனவும் அரசியல்கைதிகளை வைத்து தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார். அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல்கைதிகள் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முதலில் நாட்டில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுகொடுக்க வேண்டும் எனவும் அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டுள்ளார்.