அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, இனப்படுகொலை அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள அனைத்து அரச தலைவர்களுக்கும், அமெரிக்க ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரம், கூட்டதொடருடன் இணைந்ததாக நியூயோர்க் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இராப்போசனத்திற்காக சிறிசேனவிற்கும் விசேட அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது ட்ரம்ப் மற்றும் அவரது பாரியாரால் மைத்ரிபால சிறிசேன மற்றும் அவரின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் வரவேற்கப்பட்டனர்