வட தமிழீழம் யாழ்.திருநெல்வேலியில் குழு மோதலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ள சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ். திருநெல்வேலி சிவன்- அம்மன் கோயிலடிப் பகுதியில் பொல்லுகள் சகிதம் இரு இளைஞர் குழுக்கள் மோதிக் கொள்வதாக யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் குறித்த பகுதியைச் சுற்றிவளைத்துள்ளனர்.
காவல்துறையை கண்டதும் இளைஞர்கள் பலர் தமது உந்துருளிகளையும் கைவிட்டுத் தலைதெறிக்க ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் விரட்டிச் சென்ற குழு மோதலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர் .