சுன்னாகத்தில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருவர் கைது .!

breaking
வட தமிழீழம் யாழ்ப்பாணம், சுன்னாகம் காவல்துறையினருக்கு  கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சுன்னாகத்தில் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   வாள்கள்,பொல்லுகள் ,கோடரிகள் ,போன்ற ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஒருவரிடம் இருந்து  போதை பொருளும்  கைப்பற்றப்பட்டுள்ளது என்று சுன்னாகம் காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். அங்கிருந்த மேலும் சிலர் தப்பியோடியுள்ளனர் நிலையில் குறித்த  நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் வழங்கிய தகலுக்கு அமைய கொக்குவில் பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு மேல் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள், கைக்கோடரிகள் போன்ற ஆயுதங்கள்  மீட்கப்பட்டுள்ளன  என்று காவல்துறையினர்  தெரிவித்தனர்.