யாழில் இருவர் கைது – வாள்களும் பறிமுதல்!

breaking

வட தமிழீழம், யாழில் வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கோவில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.

யாழ் சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைய இன்று(வியாழக்கிழமை) காலை சுண்ணாகம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது இருபது மற்றும் பத்தொன்பது வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோண்டாவில் மற்றும் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த இவர்களிடமிருந்து 5 மில்லி கிராம் போதைப்பொருள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டதுடன், அவர்களிடம் தீவிர விசாரணைகளையும் பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.

இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலிற்கமைவாக யாழ் கொக்குவிலிலுள்ள இந்து ஆலயம் ஒன்றின் கோபுரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கூரிய ஆயதங்களையும் சுன்னாகம் பொலிசார் மீட்டுள்ளனர்.

ஆறு கைக்கோடரிகள் மற்றும் மூன்று பாரிய வாள்கள், மர்ம நபரைப்போல அடையாளம் தெரியாத முறையிலான இரண்டு ஆடைகளும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறையினரால் தெரிவித்துள்ளனர்.