தமிழீழத்தின் அயல்நாடான இலங்கை கொழும்பிலுள்ள வெலிக்கடை, மகசின் சிறைச்சாலைகளை சிங்கள காவல் அதிரடிப் படை பிரிவினரிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தகவலை தமிழர் விரோத போக்கை கடைபிடிக்கும் நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சு வெளியிட்டுள்ளது
சிறைச்சாலையின் பாதுகாப்பு மற்றும் விசாரணைகளுக்காக அடுத்த மாதம் முதல் தமிழினப்படுகொலையில் ஈடுப்பட்ட சிங்கள அதிரடிப்படையினரிடம் சிறைச்சாலைகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறைச்சாலையிலுள்ள சிங்கள காவல்துறை அதிகாரிகள் 10 பேர் சிங்கள அதிரடிப்படையினரின் உதவிக்காக நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.