மைத்திரிக்கு சவால் விடும் மகிந்த அணி

breaking
  ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பேசிய விடயத்தை ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுத்தி காட்டுவாரா என மஹிந்த அணி கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஶ்ரீலங்காவின் உள்ளக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள எம்மால் முடியும். சர்வதேசம் எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டமை வரவேற்கத்தக்கது. இருப்பினும் பேச்சளவில் குறிப்பிட்ட விடயத்தை செயலிலும் ஜனாதிபதி செயற்படுத்துவாரா? இராணுவத்தினருக்கு எதிராக சர்வதேச அமைப்புக்கள் கடந்த காலங்களில் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தேசிய அரசாங்கம், கடந்த அரசாங்கத்தை பழிவாங்க பயன்படுத்தக் கொள்ள முயற்சித்தது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கம் அரசாங்கத்திற்கே பல விளைவுகளை ஏற்படுத்தியது’ என குறிப்பிட்டுள்ளார்.