வடதமிழீழம், ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கற்சிலைமடுப் பகுதியிலிருந்து அனுமதிப் பத்திரம் இல்லாது தண்டுவான் பகுதிக்கு போத்தல் கள்ளை உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு சென்ற சாரதி நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்சிலைமடுப் பகுதியில் உள்ள கள் அடைக்கும் நிலையத்திலிருந்து 720 போத்தல்களில் கள்ளை ஏற்றிக் கொண்டு சென்றபோது, முல்லைத்தீவு – கிளிநொச்சி மாவட்ட பெருங்குற்றப் பிரிவு மது ஒழிப்பு போதைத் தடுப்புப் பிரிவினர் சாரதியைக் கைது செய்துள்ளனர்.