தொடர் விடுமுறையையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது 6 பேர் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் சென்ற சஞ்சய் என்ற மாணவர், கூச்சலிட்டுள்ளார். அதனை கேட்டு அருகிலிருந்தோர் உடனே ஆற்றில் மாயமான சிறுவர்களை தேடத் தொடங்கினர்.
இதற்கிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள இருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.