நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும் சிறப்பு பேருரை நிகழ்வு ஒட்டுசுட்டானில் ஆரம்பம்.!

breaking

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழிகாட்டலில் இலங்கை தமிழரசு கட்சியின் திட்டமிடலில் இடம்பெறும் நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும் சிறப்பு பேருரை நிகழ்வு வட தமிழீழம் ஒட்டுசுட்டானில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது

ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப சத்தியலிங்கம் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர்களான து ரவிகரன் ஆ புவனேஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ பிறேமகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்