ஜே.வி.பி வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளது

breaking
  ஶ்ரீலங்காவின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தநிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கம் வழமை போல் இம்முறையும் போலி வரவு செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு அரசாங்கம் பல சலுகைகளை வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.