எட்டப்பன் கருணா சுமந்திரனுக்கு சொன்னது 'குட்லக்'

breaking
    அந்த வகையில் அண்மையில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் குறித்து கருணா வெளியிட்ட செய்தியும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் கருணாவுக்கும், மைத்திரி - மஹிந்த அரசாங்கத்துக்கும் எவ்வளவு தூரத்திற்கு சம்மந்தம் இருக்கின்றது என்பதை காட்டுகின்றது. அதேபோல் அண்மையில் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் கருணா ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் சுமந்திரனை வம்புக்கு இழுக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை தொடந்த வண்ணமே உள்ளது. கூட்டமைப்பின் பல உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் புலம்பெயர் அமைப்பின் சில முக்கியஸ்தர்களுடன் இன்று பேச்சு நடத்தப்படும், குட் லக் சுமந்திரன்” என கருணா பதிவிட்டுள்ளார்