மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்று காருடன் மோதிய இரு சிறுவர்கள் படுகாயம்

breaking
  வடதமிழீழம், கிளிநொச்சி பரந்தன் ஏ-35 வீதியில் இன்று இடம் பெற்ற வீதி விபத்தில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சி பரந்தன் ஏ-35 வீதியில் பரந்தன் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்றுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 15 வயதுடைய சிறுவனும் அவனுடன் மோட்டார் சைக்களில் பயணித்த மற்றுமொரு சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வித்து இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.