முல்லைத்தீவு மாவட்ட மக்கள் புதிய பிரதமருக்கு ஆதரவு!

breaking
நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்ட மகிந்தறாஜபக்ச அவர்களை முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் மற்றும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் 05.11.18 இன்று காலை பிரதமரின் வீட்டில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் அமைச்சர் நாமால் றாஜபக்சவினையும் சந்தித்துள்ளார்கள்.
இந்த நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் அவர்கள் பிரதமர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளதுடன் இவருடன்  கரைதுறைப்பற்று பிரதேச சபைஉறுப்பினர் துசார உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பெருமளவான இளைஞர் கட்சி உறுப்பினர்கள் சென்று கலந்துரையாடி தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள்.