ஆப்கானில் தலிபான் தாக்குதல் .!

breaking
ஆப்கானிஸ்தானில் கசினி மாகாணத்தில் உள்ள கோக்யானி மாவட்டத்தில் தலிபான்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு அரசு படை மற்றும் காவல்துறையினர்  இணைந்து சோதனை சாவடி அமைத்தனர். இந்நிலையில் இந்த சோதனை சாவடி மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் மற்றும் 6 போலீசார் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்றுள்ளது.