ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தொல் திருமாவளவன் நேரில் சந்திப்பு.!

breaking
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள ”தேசம் காப்போம்” என்ற மாநாட்டில் பங்கேற்க, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வரும் டிசம்பர் 10ஆம் தேதி தேசம் காப்போம் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்து வருகிறார். இந்நிலையில், விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவையும் நேரில் சந்தித்து, மாநாட்டில் கலந்துக்கொள்ளும்படி திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.  நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவுக்கு எதிரான மாநாட்டில் பல்வேறு தேசிய மற்றும் மாநில அளவிலான தலைவர்கள் ஒரு சேர மாநாட்டில் கலந்துகொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது