மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிளிநாச்சியில்

breaking
ஐக்கிய இராச்சியத்தின் வீர தமிழர் முன்னணியின் ஏற்பாட்டில்அறம் செய் அறக்கட்டயைின் உதவியுடன்எமக்காக வாழ்ந்தவரை வாழவைப்போம் எனும் தொனிப்பொருளில் மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிளிநாச்சியில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் கிளிநாச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. சுமார் 400 மேற்பட்ட மக்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். விடுதலை போராட்டத்திற்கு தமது உயிர்களை இழந்த மாவீரர்களின் பெற்றோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். மாவீரர் நினைவாக வைக்கப்பட்டிருந்த பொது படத்திற்கு பெற்றோர் மலர் தூவி வணக்கம் செலுத்தியிருந்தனர்.