முறுகண்டி வளாகத்தில் உள்ள மின் விளக்குகள் சீர்செய்யப்பட்டுள்ளது!

breaking
முல்லைத்தீவு மாவட்டம் ஏ 9 வீதிப்பகுதியில் அமைந்துள்ள முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தினை அண்மித்த வீதியில் உள்ள 08 மின்விளக்குகள் கடந்த காலங்களில் இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது.
இன்னிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் அவர்களின் முயற்சியால் சீர்செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் உள்ள எட்டு சூரிய மின்கல மின்விளக்குகள் அதில் உள்ள மின்கலம் பழுதடைந்த காரணத்தால் அவை இரவு நேரங்களில் ஒளிராத நிலை கணப்பட்டுள்ளது அவற்றில் உள்ள மின்கலங்களை மாற்றி மின் விளக்குகள் ஒளிரும் வண்ணம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் சீர்செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சீர்செய்து கொடுக்கப்பட்டமைக்கு முறுகண்டி பிள்ளையார் ஆலய வர்த்தகர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளருக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.
நாள்தோறம் ஆயிரக்கணக்கான மக்கள் சென்றுவரும் பகுதியாக முறிகண்டி பிள்ளையார் ஆலயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது