புலம்பெயர் உறவுகளால் பத்து பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு.!

breaking

வட தமிழீழம் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பத்து பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

கனேடிய தமிழ் தேசிய அவையின் மண்வாசனை செயற்றிட்டத்தின் ஊடாக இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை 3 மணிக்கு மாங்குளம் பழைய கொலனி போதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது

நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பம் மற்றும் வருமைக்குட்ப்பட்ட குடும்பங்களில் இருந்து பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்