சிங்கள இனவாத ஜனாதிபதியின் வருகைக்கு தயாராகும் இரணைமடு

breaking
  நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) சிங்கள் இனவாத ஜனாதிபதி இரணைமடுவுக்கு செல்லவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளை திறக்கும் பொருட்டு மைத்திரி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் மாகாண மற்றும் மாவட்ட உயரதிகாரிகள் எவரும் இதனை உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனாலும் இன்றைய தினம் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறைமா அதிபர் கேபி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளன