சமாதானத்தை வலியுறுத்தியும் அமைதி நீடிக்க வேண்டியும் நீராவிப்பிட்டியில் கவனயீர்ப்பு!

breaking
07.12.18 அன்று முள்ளியவளை நீராவிப்பிட்டியில் உள்ள ஜிம்மா பள்ளிவாசலில் அன்று மதிய தொழுகையின் பின்னர் முஸ்லீம் மக்கள் பள்ளிவாசல் முன் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.
மீண்டும் யுத்தம் எமக்க வேண்டாம் சுதந்திரமாய் வாழ்வோம்,
எமது பிள்ளைகளுக்கு சுதந்திரமான நாடு வேண்டும்,
பட்ட கஸ்ரம் மறந்துபோய் விட்டதா மீண்டும் யுத்தம் எமக்கு வேண்டாம்,
வவுணதீவுபொலீஸ் அதிகாரிகள் கொலையினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்,
என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியவாறு சிறுவர்கள் முதியவர்கள் என பலர் இந்த கவயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.