ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி!

breaking
இலங்கை அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து இனப்படுகொலையாளன் ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா.சு.க. வின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று(07) நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும்  ராஜபக்ச  தலைமையிலான சிறிலங்கா  பொதுஜன பெரமுன ஆகியனவே இவ்வாறு புதிய கூட்டணியில் ஒன்றிணையவுள்ளன. குறித்த புதிய கூட்டணியானது இடம்பெறப்போகும் தேர்தலில் ராஜபக்ச  தலைமையில் ஒன்றித்துச் செயற்படவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்  மேலும் தெரிவித்துள்ளார்.