2018 ஆம் ஆண்டில் இதுவரை வேலை வாய்ப்பிற்காக சென்ற 222 பேர் உயிரிழப்பு

breaking
  இந்த வருடத்திற்குள் வேலைவாய்ப்பிற்காக வௌிநாட்டிற்கு சென்ற 222 ஶ்ரீலங்கா பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். சவூதி அரேபியாவிலேயே அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மாதவ தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் மாத்திரம் 70 பேர் உயிரிழந்துள்ளனர். குவைட் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலும் ஶ்ரீலங்கா பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். கொலை, வாகன விபத்து, திடீர்மரணம், தற்கொலை போன்றவைகளால் ஶ்ரீலங்கா பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயத்தை கருத்திற் கொண்டு, இழப்பீடு பெற்றுக் கொடுப்பதற்கு அந்தந்த நாடுகளின் முகவர்களைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட பணியாளர்களுக்காக 5 இலட்சம் ரூபா வரையில் இழப்பீடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தவிர, விபத்துக்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளாகி மேலும் சில ஶ்ரீலங்கா பணியாளர்கள் அங்கவீனமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.