குப்பைக்குள் குண்டு: காவல்துறையால் மீட்பு

breaking
  தென்தமிழீழம், அம்பாறை, நற்பிட்டிமுனை பழைய மின்சார சார சபை வீதியில் இன்று (09) ஞாயிற்றுக் கிழமை காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்படுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நற்பிட்டிமுனையிலுள்ள குறுக்கு வீதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு கல்முனை காவல்துறையினரால் மீட்க்கப்படுள்ளது . காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்து கைக்குண்டை மீட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.