ஆயுதம் தேடி தோண்டினர்.... அகப்பட்டது என்ன?

breaking
Digging_1 (1)கிளிநொச்சி கண்டாவளைபிரதேச செயலர்பிரிவின் கீழுள்ள சுண்டிக்குளம் 10 கட்டை  பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கையை, கிளிநொச்சி விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்டுள்ளனர்.இதன் போது எவையும் கிடைக்காத நிலையில் அகழ்வு பணி கைவிடப்பட்டுள்ளது. Digging_1 (3)மேற்படி காணியில் வெடிபொருட்கள் இருப்பதாக விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கிளிநொச்சி மற்றும்  தர்மபுரம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்த குற்றத்தடுப்புப் பொலிஸார், தர்மபுரம் பொலிஸார் ஊடாக அந்த இடத்தைத் தோண்டுவதற்கான அனுமதியை கிளிநொச்சி நீதிமன்றத்தில் பெற்றனர்.  அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து, அந்த இடத்தை தோண்டுவதற்கான நடவடிக்கையில் குற்றத் தடுப்புப் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் தர்மபுரம் பொலிஸார் ஆகியோர் மேற்கொண்டபோதும், இதன் போது எவையும் கிடைக்காத நிலையில் அகழ்வு பணி கைவிடப்பட்டுள்ளது.Digging_1 (4)