பொலீசாரின் பக்கச்சார்பான நடவடிக்கை தொடர்பில் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்!

breaking
புதுக்குடியிருப்பு 07 ஆம் வட்டாரப்பகுதியில்  04.05.2018 அன்று ஏற்பட்ட காணிப்பிணக்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பொலீஸ் நிலையத்தில் முறைபாடு செய்து இதுவரை தமக்கு நீதி கிடைக்காத நிலையில் பொலீசாரின் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் பக்கசார்பான நடவடிக்கை தொடர்பில் கொழும்பில் உள்ள உச்சநீதிமன்றில் 06.12.18 அன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் தனது உண்மை நிலையினை எடுத்துக்கூறி தனக்கு நீதிகிடைக்கவேண்டும் என்று தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் 05.10.18 அன்று தனது மனி உரிமை மீறல் தொடர்பில் முறையிடப்பட்டு இரண்டு தடவைகள் விசாரிக்கப்பட்டும் நீதி கிடைக்கவில்லை
அதேவேளை இவரின் வழக்கு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆறு தடவைகள் விசாரிக்கப்பட்டும் இணக்கசபைக்கு விடப்பட்டும் இவருக்கான நீதி கிடைக்காத நிலையில் கொழும்பில் உள்ள உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.