மன்னாரில் மட்டுமல்ல ஏனைய மாவட்டங்களிலும் சில மனிதாபிமானமற்ற மனிதர்கள் வாழத்தான் செய்கின்றார்கள் இவர்களின் செயல்பாடுகள் மிருககுணமுடையதாகவே இருக்கின்றது...
11-12-2018 இன்று காலை மன்னார் பொதுவைத்திய சாலையில் பெரிய வாசலில் இரண்டாவது அருகில் இரண்டு கழுதைகள் கொடுரமாக அடித்துக்கொன்றுவிட்டு வீதியின் அருகில் கொண்டுவந்து போட்டுள்ளார்கள் காகமும் நாய்களும் மொய்த்துள்ளது.
மன்னார் பொதுவைத்தியசாலையில் உள்புகுந்த கழுதைகளை அடித்துக்கொலை செய்யுமளவிற்கு கோபமும் மனிதப்பண்பும் அற்றவர்கள் தான் பாதுகாவலராக கடமை புரிகின்றார்களா?
கடமைநேரத்தில் கதவை திறந்து விட்டு விடுப்புபார்த்துக்கொண்டும் தொலைபேசியில் மூழ்கி இருந்துவிட்டு பாவம் 05அறிவு ஜீவன் உள்ளே போனால் அதை கலைத்து விடலாம் அதை அடித்துக்கொலை செய்யச்சொல்லி சட்டம் உள்ளதா...
தவறுதலாக நடப்பதை மன்னிக்கலாம் இப்படி வேண்டுமென்றே செய்வதை என்ன செய்யலாம்....
ம