தென்தமிழீழ ஆயுதக் குழுக்களிடம்  ஆயுங்கள் உண்டு: த.தே.மு சுரேஸ் குற்றச்சாட்டு

breaking
  கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இயங்கிய பல ஆயுதக்குழுக்கள் இன்னும் தங்களது ஆயுதங்களை உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கவில்லை என தமிழ் தேசிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் தர்மலிங்கம் தெரிவித்துள்ளார். 90களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆயுதக்குழுக்கள் இன்னும் தாங்கள் பயன்படுத்திய ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கவில்லை. குறித்த குழுக்களிடம் இன்றும் ரீ56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் உள்ளன. அவற்றுக்கு என்ன நடந்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.