பெயருக்கு திறந்த அலுவலகத்தை பூட்டி வைத்திருக்கும் கூட்டமைப்பு பா.உ

breaking
வடதமிழீழம், மன்னாரில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கிளை அலுவலகம் தொடர்ச்சியாக மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், இதனால் பல்வேறு தேவைகளுக்காக செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக்கூட்டடைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் மாவட்டக் காரியாலயம் ஒன்று மன்னார் உப்புக்குளம் புதுத்தெரு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. எனினும் குறித்த அலுவலகம் திறக்கப்பட்டு சில நாட்கள் அங்கு மக்கள் சந்திப்பு இடம் பெற்று வந்துள்ள போதிலும் தற்போது நீண்ட காலமாக குறித்த பூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதோடு,அலுவலக பணியாளர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரே அலுவலகத்திற்கு வருவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக பூட்டப்பட்டுள்ள குறித்த அலுவலகத்திற்கு மக்கள் சென்று ஏமாற்றத்துடன் திரும்புவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.