முல்லைத்தீவில் பாழடைந்த கிணற்றில் வீழ்ந்த பாலகன் பலி!

breaking
  முல்லைத்தீவு கள்ளபாடு பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிற்குள் வீழ்ந்த பாலகன் ஒருவர் உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் 10.1218 அன்று நடைபெற்றுள்ளது. கள்ளப்பாடு பகுதியினை சேர்ந்த 03 அகவையுடைய றஜிதன் ரதிசன் என்ற சிறுவன நேற்று மாலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டின் பின்பகத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளார். கள்ளப்பாட்டுப்பகுதியில் ஆழிப்போரலையின் தாக்கத்தின் போது சேத்திற்கு உள்ளான பல கிணறுகள் மற்றும் மலங கிடங்குகள் காணப்படுகின்றன இவற்றை மூடிவிடுமாறு மக்கள் பலதடவைகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கொள்ளவில்லை என மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதேவேளை உரிழந்த சிறுவன் நேற்று இரவு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மரணவிசாரணை அதிகாரியின் விசாரணைகளின் பின்னர் சிறவன் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.