சிறைச்சாலைக்கு புதிய மதில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

breaking
  திருகோணமலை சிறைச்சாலைக் கைதிகளின் பாதுகாப்புக் கருதி, சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வாவின் பணிப்பின் பேரில், பிரதான ஜெயிலர் கே.ஏ.எச்.அபேரத்தினவின் தலைமையில், உத்தியோகபூர்வமாக நடைபெற்றுள்ளது இச்சிறைச்சாலையின் 50 வருடங்கள் பழமையான சுற்றுமதில் வெடிப்புற்று, உடைந்து காணப்பட்ட நிலையிலேயே, பழைய சுற்றுமதிலை அகற்றி, புதிதாகக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், சிறைச்சாலையின் ஜெயிலர் தர உத்தியோகத்தர்கள், புனர்வாழ்வு அதிகாரிகள் உட்பட சிறைச்சாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.