யாழில் பாலியல் துஸ்பிரயேகம் செய்த ஆசிரியரை மாற்றக் கோரி பெற்றோர்கள் போராட்டம்!

breaking
யாழில் மாணவிகளை பாலியல் துஸ்பிரயேகம் செய்த ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரி போராட்டம் யாழ்ப்பாணத்தில் 5 மாணிவகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமைக்கு எதிர்பு தெரிவித்து பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பாடசாலை முன்றலில் இன்று காலை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள்,மாணவர்கள், பளையமாணவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட யாழ் பெரியகுளம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது குறித்த பாலியல் குற்றம் புரிந்த ஆசிரியரை இடம்மாற்றம் செய்ய கோரி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பாடசாலைகள் சிலவற்றில் ஒரு சில கீழ் தரமான ஆசிரியர்கள் சிலரின் இவ்வாறான செயற்பாடுகளால் யாழ் கல்விச்சமூகத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்.