யாழில் அழிவடைந்து வரும் திராட்சை!

breaking
யாழ். மாவட்டத்தில் நோய்த் தாக்கத்தினால் திராட்சை செய்கை அழிவடைந்து வருகின்றது. மாவட்டத்தின் வடமராட்சி, வலிகாமம் ஆகிய பகுதிகளில் திராட்சை அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது. வலிகாமம் வடக்கு பகுதியில் திராட்சை செய்கை அதிகளவில் செய்கை பண்ணப்படுகின்றது. இந்த பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக நோய்த்தாக்கம் காணப்படுவதாகவும், இதனால் திராட்சை செய்கையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டனர். இது தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு தெரவித்த போதிலும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.