ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

breaking
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாங்குளம் முதன்மை வீதியில் பேருந்து ஒன்று உந்துருளி ஒன்றுடன் மோதிய விபத்தில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்துள்ளார்கள்.
இச்சம்பவம் 14.12.18 அன்று நண்பகல் ஒட்டுசுட்டான் சந்தியில் இச்சபம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறியஉந்துருளி ஒன்றில் சென்ற நெடுங்கேணியினை சேர்ந்த சாதாரண பரீட்சை எழுதிய மாணவனும் அவனது உறவினரும் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன்போது 16 அகவையுடைய கரடிப்பிலவு நெடுங்கேணியினை சேர்ந்த நாகராசா மதுசன்,அதே இடத்தினை சேர்ந்த 28 அகவையுடைய ரி.முகுந்தன் இருவரும் படுகாயமடைந்துள்ளார்கள்.
இதில் முகுந்தன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்பொது மருத்துவ மனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்