பெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்!

breaking
யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு பகுதியில் பெற்றோரை இழந்து விசோட தேவைக்கு உட்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த  யேசுராசா சிந்துயா என்ற யுவதிக்கு அவரின் வாழ்வாதாரத்தினை விருத்தி செய்யும் நோக்கில் காலையடி இணைய உதவும் கரங்களின் அனுசரணையுடன் புலம்பெயர் அன்பர் ஒருவரின் நிதிப்பங்களிப்பில் தையல் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
14.12.18 அன்று இருபாலை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தில் வைத்து குறித்த தையல் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.