தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு -டென்மார்க்.!

breaking
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு டென்மார்க் வயிலை (Vejle) நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. முதல் நிகழ்வாக ஈகைச்சுடர் ஏற்றல் மலர் வணக்கம் அகவணக்கத்தோடு,பேச்சுகள்,கவிதைகள், என்பன இடம்பெற்றன.
 
கடந்த மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக தமிழீழப் போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராசதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்றதோடு, ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். ஈழத்தமிழன் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும், இராசதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.