மூங்கிலாற்றில் 132 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கிவைப்பு!

breaking
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாற்று பிரதேசத்தில் சிவன் அறக்கட்டளையினரால் 132 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை 16.12.18 அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மூங்கிலாறு தெற்கு,மூங்கிலாறு வடக்கு,தேராவில் கிழக்கு,இருநூறு வீட்டுத்திட்டம்,மில்லர் குடியிருப்பு,றகுபதி குடியிருப்பு, போன்ற கிராமங்களை சேர்ந்த 132 பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிராம அமைப்புக்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஜேன்சன், சிவன் அறக்கட்டளையின் நிறுவுனர் கணேஸ் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கிவைத்துள்ளார்கள்.