யாழில் இறந்து கரையொதுங்கும் ஆமைகள்

breaking
யாழ்ப்பாணம் அச்சுவேலி - அக்கரை கடற்கரை பகுதியில், ஏராளமான கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகின்ற நிலையில், ஏன் இவ்வாறு ஆமைகள் இறந்து கரையொதுங்குகின்றன என்பது தொடர்பில், அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடல் நீரேரிவாயும் கடலும் தொடுக்கும் டெல்டா பகுதியிலேயே, இவ்வாறு 7, 8 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக, அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்