முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசம் இருந்த ஒருதொகுதிகாணிகள் இன்று விடுவிப்பு!

breaking
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் படையினர் வசமுள்ள 52.14 ஏக்கர் காணிகள் இன்று 18.12.18 மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இன்று மாலை 6.00 மணிக்கு முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் படையினரின் ஏற்பாட்டில் நத்தார் கரோல் தொடக்க நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. ந்த நிகழ்வில்வைத்து படையினர் வசமுள்ள காணிகள் 52.14 ஏக்கர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.