வழிபாட்டுத் தலங்களின் சீரமைப்பு வேலைகளுக்கு ரவிகரன் அவர்களால் உதவி!

breaking
கோவில்கள், மற்றும் தேவாலயம் என்பவற்றின் சீரமைப்புப் பணிகளுக்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2018ஆம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டிலிருந்தே இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வருடம் மொத்தமாக, எட்டு வழிபாட்டுத் தலங்கள் உள்வாங்கப்பட்டு, ரவிகரன் அவர்களால் சீரமைப்பு வேலைகளுக்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் யோகபுரம் பகுதியில் அமைந்துள்ள சிறீ வயலூர் விநாயகர் கோவில், கைவேலிப் பகுதியில் அமைந்துள்ள சிறீ முறிகண்டிப் பிள்ளையார் கோவில், ஒட்டிசுட்டான்,புதியநகர் பகுதியில் அமைந்துள்ள இத்தியடி சித்த விநாயகர் கோவில் போன்ற வழிபாட்டுத்தலங்களுக்கு ஏற்கனவே, உரூபாய்150,000(ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்) பெறுமதியான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்தவாரம் தூய வேளாங்கன்னி மாதா தேவாலயம்(தீர்த்தக்கரை), நரசிம்ம வைரவர் கோவில்(3ம்வட்டாரம் முள்ளியவளை), கோட்டைக்கேணிப் பிள்ளையார் கோவில்(கொக்குத்தொடுவாய்), சிறீ ஞானமூர்த்திப் பிள்ளையார் கோவில்(வற்றாப்பளை), ஆதி நாகதம்பிரான் கோவில்(கள்ளப்பாடு,வடக்கு) ஆகிய ஐந்து வழிபாட்டுத் தலங்களுக்கும் உரூபாய் 210,000.00(இரண்டு இலட்சத்துப் பத்தாயிரம்) பெறுமதியான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலகத்தில் ஆலய நிர்வாகிகளுக்கு குறித்த காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் இவ்வருடம் மொத்தமாக எட்டு வழிபாட்டுத் தலங்கள் உள்வாங்கப்பட்டு, உரூபாய் 360,000.00(மூன்று இலட்சத்து அறுபதாயிரம்) பெறுமதியில் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.