கிளிநொச்சி நலன்புரி சங்கம் நடாத்திய அரச அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டு விழா.!

breaking
வட தமிழீழம் கிளிநொச்சி மாவட்ட செயலக நலன்புரி சங்கம் நடாத்திய கிளிநொச்சி மாவட்ட அரச திணைக்களங்களிற்கிடையிலான அரச அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது. கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குறித்த விளையாட்டு விழாவில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச திணைக்களங்களும் பங்கு கொண்டன. விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் குறித்த விளையாட்டு விழா இன்று பிற்பகல் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச திணைக்கள உயரதிகாரிகள் பலரும் பங்கு கொண்டனர்.
அதன்போது கூடைப்பந்து, கால்ப்பந்து, ஓட்டம் மற்றும் பல்வேறு விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வெற்றிபெறும் வீரர்களிற்கு பெறுமதியான பரிசுகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், சிறந்த முறையில் திறமைகளை வெளிக்காட்டும் திணைக்களத்திற்கு 2018ம் ஆண்டுக்கான அரச அதிபர் கிண்ணம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கதாகும். இப்போட்டி இன்றுடன் நிறைவடைய உள்ளமை குறிப்பிடதக்கதாகும்.