காவல்துறையினரால் தேராவிலில் ஆயுதங்கள் மீட்பு

breaking
  வடதமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேராவில் காட்டுப்பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவு காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (17) மீட்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் ஒருதொகுதி ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் அங்கு சென்ற முல்லைத்தீவு காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (17) இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது இதன்போது ராங்கி செல்-1 மிதிவெடிகள் -5 81 மில்லிமீட்டர் எறிகணை -01 81வகை மோட்டர் குண்டு -2 கிறிஸ்ரி செல் -02 ஆர் பி ஜி -1 என்பனவே இதன்போது மீட்கப்பட்டுள்ளது யாழ்ப்பாண பிரதேச கட்டளை அதிகாரி உதவி காவல்துறை அதிகாரி பியனந்த அவர்களது ஆலோசனைக்கு அமைய முல்லைத்தீவு காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதான பொலிஸ் அதிகாரி டி எப் யு கே அபேரத்ன அவர்களது தலைமையில் உதவி காவல்துறை பரிசோதகர் எந்துலால் பொலிஸ் சாஜன்ட் 35259 பிரசன்ன காவல்துறை கொஸ்தாபல்கலான 90769 பண்டார 11289 ஜஜசுந்தர 68285 சுரங்க 90585 ரத்னாயக்க உள்ளிட்டவர்களால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது