அம்பாறையில் கார் ஒன்று பள்ளத்திற்குள் வீழ்ந்துள்ளதில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
அம்பாறை மலையடி பாலத்தில் இருந்து கார் ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளார்கள்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது விபத்தில் உயிரிழந்தவர்கள் அக்கரைப்பற்று பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் வியாபாரம் நிமித்தம் வாகனத்தில் சென்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா காயமடைந்த நிலையில் யாழ் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் இருந்து மன்னார் நோக்கி தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது மாந்தை மேற்கு இலுப்பைகடவை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.