வவுனியாவில் கோடீஸ்வர வர்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் சண்முகம் செல்வராசா என்ற கோடீஸ்வர வர்தகர் ஒருவரை நேற்று பிற்பகல் கடத்தி சென்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
அவர் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து அவருக்கு சொந்தமான கைபேசி செருப்பு,மூக்கு கண்ணாடி என்ப மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டர் நீண்டகாலமாக வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளதாகவும் அவரது மனைவி வெளிநாட்டில் ஒன்றில் இருப்பதாகவும் தெரிவித்த பொலீஸார் அவர் ஹசினோ சுசூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடத்தப்பட்டவரின் தொலைபேசிக்கு உள்வந்த அழைப்புக்களின் இலக்கங்களை பொலீஸார் கோரியுள்ளார்கள்.
வட்டிக்கு கடன் கொடுத்துள்ளமை தொடர்பில் ஏற்பட்ட முறுகல்நிலையால் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிப்பதாக பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள வவுனியா பொலீஸாரால் சிறப்பு பொலீஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.