வரவு செலவு திட்ட யோசனையின் போது கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.!

breaking
எதிர்வரும் வரவு செலவு திட்ட யோசனையின் போது கூட்டமைப்பு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஈ.பி.ஆர்.எப் கட்சியின் கிளிநொச்சி கிளையினரின் நிர்வாக தெரிவு  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “வரவிருக்கின்ற வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதித்து அவற்றினை நிறைவேற்றுவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதன் பின்னரே அரசாங்கத்திற்கான ஆதரவு தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். முக்கியமாக அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் காணிப்பிரச்சனைகள் போன்ற விடயங்களுக்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இந்தமுறையும் கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியைத் தவற விடுவார்களாயின் எக்காலத்திலும் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் எதையுமே அடைய முடியாது. இதனால் எதிர்காலத்தில் தமிழர்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதே உண்மையான நிலைப்பாடாகும்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.