கத்தோலிக்க தேவாலயங்களில் பொங்கல் கொண்டாட ஏற்பாடு

breaking
  வடமிழீழம், மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருவதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதன்படி நாளை காலை 6 மணியளவில் மன்னார் மறை மாவட்டத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் இன்று இடம்பெற்றதாகவும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். குறிப்பாக இறைவன் அளித்த கொடைகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.